பாம்பு கடித்து தனியார் நிறுவன காவலாளி பலி:

582பார்த்தது
பாம்பு கடித்து தனியார் நிறுவன காவலாளி பலி:
தூத்துக்குடியில் பாம்பு கடித்து தனியார் நிறுவன காவலாளி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மேலத் தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் ராமசாமி (74). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வந்தார். கடந்த 25ஆம் தேதி இரவு அவர் பணியில் இருந்தபோது, விஷ பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது.

இதில் மயக்கம் அடைந்து உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி