மேம்பாலத்தில் விபத்து: லாரி டிரைவர் பலி!

85பார்த்தது
மேம்பாலத்தில் விபத்து: லாரி டிரைவர் பலி!
கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் சாலை தடுப்பில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம், நடுத்தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ராமகிருஷ்ணன் (62). லாரி டிரைவர். இவா், நேற்று திருநெல்வேலியிலிருந்து சிவகாசிக்கு லாரியில் பழைய பேப்பா்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தாா். திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இனாம்மணியாச்சி மேம்பாலத்தில் லாரி கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பில் மோதியதாம்.

இதனால், ராமகிருஷ்ணன் கீழே குதித்தாராம். அப்போது, அவா் மீது லாரியின் பின்பக்க டயா் ஏறியதாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி