திண்டுக்கல் - Dindigul

திண்டுக்கல்: 100% சேர்க்கை தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(11.06.2025) நடைபெற்றது.  திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் 6 மாணவர்கள் ஓசூர் டைட்டன் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணலில் (Campus Interview) கலந்து கொண்டு பணி வாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கான பணி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர்(பயிற்சி) வினோதினி பார்த்திபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


திண்டுக்கல்