தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. நீதிமன்றம் சரமாரி கேள்வி

83பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. நீதிமன்றம் சரமாரி கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தது குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் பட்டியலை இணைத்து மனுதாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாயமா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தாக்கல் செய்த வழக்கை ஜனவரி 19-க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி