சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நுழைந்துள்ள நிலையில், ஐசிசி சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. மார்ச் 04-ம் தேதி முதல் அரையிறுதி ஆட்டங்கள் தொடங்க உள்ளது. 2023 ஒருநாள் கோப்பை அரையிறுதிக்கு தகுதிப்பெற்ற அதே நான்கு அணிகள்தான், தற்போது சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கும் தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.