இளங்கார்குடியில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை

1074பார்த்தது
திருவாரூர் அருகே இலவங்கார்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரது மனைவி பிரபாவதி (40)என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் நாகராஜன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் பிரபாவதி மட்டும் தனியே வசித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் இல்லை. மேலும் பிரபாவதி ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணி ஆகியும் அவர் வெளியே வராததால் ஆடுகள் கத்த தொடங்கியுள்ளன. இதனால் அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே பிரபாவதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் உடலை கைப்பற்றி தாலுகா காவல் துறையினர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காலை முதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தியதின் பேரில் அவர் தெரிவித்ததாவது இக்கொலை சம்பவம் நகை பணத்திற்காக நடைபெறவில்லை. உடற் கூறு ஆய்விற்கு பிறகுதான் தெரியவரும் எனவும் விரைவில் கொலையாளி கண்டறிய படுவார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி