பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய எஸ்.பி.,

1895பார்த்தது
பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உலகம் முழுதும் 2024 புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில், திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.
காவல்துறையினர் இரவு 12 மணியளவில் அந்த பகுதியில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களை அழைத்து புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொள்ள வைத்தனர். மேலும், மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் செய்தியாளர்கள் உள்ளிட்ட கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இனிப்புகள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி