அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல ஆன் விருது

64பார்த்தது
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல ஆன் விருது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளியில் பன்முகத் திறனோடு செயல்படும் ஆசிரியர்களுக்கு நல் ஆசான் விருதுகள் வழங்கப்பட்டன.

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் அறக்கட்டளை ஆண்டுதோறும் பன்முகத் திறனோடு செயல்படும் ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நல் ஆசான் விருது வழங்கி கௌரவித்தது வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு மாணவர்களின் தனித்திறன் மேம்பாடு, தேர்ச்சி விழுக்காடு, உள் கட்டமைப்புகள் மேம்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளியில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நல் ஆசான் விருது வழங்கப்பட்டன.

விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் நிறுவனர் பொறியாளர் கணேஷ் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத் தலைவர் ரொசாரியோ, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு சூரியகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி