100 நாள் பணியாளர்களுக்கு 319 கூலி வழங்கிட வலியுறுத்தி வலங்கைமானில் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளார் சங்கம் சார்பில் வலங்கைமானில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன் தலைமை வாகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 319 சட்டக் கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.