மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் பாலாலய விழா

84பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பாலாலய விழா நாளை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோவில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும் சிறப்புமிக்க கோவிலாகும் இந்தக் கோவிலில் கடந்த 2010 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான நாளைய தினம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி இன்று மாலை ராஜகோபால சுவாமி சன்னதியில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. இதில் பகவத் அனுக்கை, பூரணா ஹூதி, படங்களுக்கு ஜலாதி வாசம் ரக்ஷா பந்தனன் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. நாளை காலை 5: 00 மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி