திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் வெளியேறும் மதகு ஷட்டர்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வெளியேறி வீணாகி வந்தது, தண்ணீர் வெளியேறாமல் தடுக்க 2 அவசர கால ஷட்டர் அமைக்கும் பணியும், துரு அகற்றும் பணியும் துவங்கி நடைபெற்று வருகிறது. மழை காலம் துவங்குவதற்குள் சேதமடைந்த ஷட்டர்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.