கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு; பதறிப்போன நிர்வாகம்

2643பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் இந்த பகுதியிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் ஆறு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பணிகள் குமாரராஜிப்பேட்டை கிராமத்தில் செல்வதால் கோயில்கள் இடிக்கப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்தனர்.

இப்படி கோயில்களை இடிக்க கூடாது. நாங்கள் கிராம கோயிலாகவும் எங்கள் குலதெய்வ கோயிலாகவும் வழிபட்டு வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். இவர்களிடத்தில் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி