1. 5 கோடி நகை பணம் கொள்ளை

84பார்த்தது
ஆவடி அடுத்த முத்தாபேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் இதே பகுதியில் கிருஷ்ணா ஜுவல்லரி என்னும் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல நகை கடையை திறந்துள்ளார். அப்போது மதிய வேலையில் கடைக்கு வந்த நான்கு மர்ம நபர்கள் பிரகாஷிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் பிரகாஷிடம் நகைகளை கொடுக்கும்படி கேட்டுள்ளார். பிரகாஷ் நகைகளை கொடுக்க மறுக்கவே துப்பாக்கியை காட்டி கை கால்களை கட்டி போட்டுவிட்டு லாக்கர் அறைக்கு கூட்டி சென்று தாங்கள் கொண்டு வந்த பையில் நகை, 5 லட்சம் ரூபாய் பணம், ஐபோன் ஆகியவற்றை போட்டுக் கொண்டு தயாராக இருந்த காரில் தப்பி சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து நகை கடை உரிமையாளர் பிரகாஷ் முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் CCTV காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கொள்ளை சம்பவம் அரங்கேறிய நகை கடையில் ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் துணை ஆணையர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து கொள்ளை விவகாரம் குறித்து கண்டறிய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி