ஆறு வழி சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு-தேர்தல் புறக்கணிப்பு.

587பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் தச்சூரிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதி பள்ளிப்பட்டு அருகே குமாரராஜ் பேட்டை பகுதியில் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமத்தின் அருகாமையில் உள்ள கோவில் மற்றும் விளைநிலங்கள் கையகப்படுத்த எதிர் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் விக்னேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்க மறுத்து கிராம மக்கள் தொடர்ந்து வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 976 வாக்குகள் உள்ள இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி