ஓட்டு அளிக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

1888பார்த்தது
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட நெமிலி ஊராட்சியில் உள்ள வாக்கு சாவடி மையம்-269 இந்த வாக்கு சாவடியில் இதே கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது தந்தை கனகராஜ் என்பவரை வாக்களிப்பதற்காக அழைத்து வந்துள்ளார்.

அப்போது வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே வந்தவர் வாக்களிக்க செல்லும் பொழுது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கனகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி