சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் மெத்தனம்.

72பார்த்தது
சுகாதார நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் மெத்தனம்.
திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக அரிசந்திராபுரம், தொழுதாவூர், சின்னம்மாபேட்டையை சேர்ந்த, 25, 000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்அடைந்து வருகின்றனர்.


இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், துணை சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்தது. இதையடுத்து, ஊராட்சி சார்பில் தனியார் இடத்தில், தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது.

ஆனால், இங்கு மருத்துவமனைக்கு உண்டான போதிய வசதி இல்லாததாலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருக்க முடியாத சூழலும் உள்ளது.

அதேபோல், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்து கொள்ள இடவசதியும் இல்லை. இதனால், கர்ப்பிணி பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி