ஜல்லி கற்கள் சாலையால் வாகன ஓட்டிகள் திக்... திக்.

74பார்த்தது
ஜல்லி கற்கள் சாலையால் வாகன ஓட்டிகள் திக்... திக்.
"திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் - - சின்னம்மாபேட்டை மாநில நெடுஞ்சாலை வழியாக, வியாசபுரம், அரிசந்திராபுரம், தொழுதாவூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 20, 000த்திற்கும் மேற்பட்டோர், தினமும் திருவள்ளூர், கடம்பத்துார், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல், மணவூர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இந்த சாலை வழியாக சைக்கிளில் சென்று வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் சென்று வர லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஜல்லிக் கற்கள் சிதறி, ஆங்காங்கே பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, பழுதடைந்த இந்த தார்ச்சாலையை சீரமைக்க, திருத்தணி கோட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி