தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமடைந்து வரும் நிலையில், திருவெற்றியூர் சன்னதி தெருவில் அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு நடன கலைஞர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த பகுதியில் திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்பொழுது திமுக மண்டல குழு தலைவர் திமுக தனி அரசு அப்பகுதியில் உள்ள கடைகளில் துண்டு பிரசங்கங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு சென்று வந்த நிலையில், அதிமுக சார்பில் எம்ஜிஆர் வேடமடைந்து நடனமாடிய நடன கலைஞரிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு துண்டுப்பசுரம் வழங்கிய போது அப்பகுதியில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்படுத்தியது.