சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங்குடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக நிர்வாக ராஜப்பா பெண்கள் உட்பட அதிமுக தொண்டர்களை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருந்தார். இதனிடையே பிரச்சார வாகனத்தில் ராஜாப்பாவை ஏற்றவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் எட்டுப்பட்டனர். அப்போது முன்னாள் எம்.எல்.எல் தன்சிங்பெண்களை இழிவாக பேசியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம், கைகலப்பும் ஏற்பட்டதில் பிரச்சார வாகனத்தின கண்ணாடி உடைக்கபட்டது. இதனால அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.