இளைஞரை கடித்து குதறிய தெரு நாய்கள்: அதிர்ச்சி வீடியோ

51பார்த்தது
கர்நாடகாவின் பாகல்கோட் பகுதியில், இல்கல் நகர் காந்தி சௌக் அருகே இளைஞர் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​திடீரென தெருநாய்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்கின. நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, நாய்கள் கடித்து குதறத் தொடங்கின. இதனால் படுகாயம் அடைந்த வாலிபர் அங்கிருந்து ஓடினார். இருப்பினும் விடாமல் அந்த நாய்கள் அந்த நபரை பின் தொடர்ந்தன. இது தொடர்பான CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி