மதுரவாயலில் கோயிலை இடித்தபோது அழுத பெண் பக்தர்கள்

2248பார்த்தது
மதுரவாயல் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த நாகாத்தம்மன் கோயிலை இடித்த போது பக்தர்கள் சிலர் சாமியாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மதுரவாயல் பகுதியில் 60 ஆண்டுகள் பழைமையான நாகாத்தம்மன் கோயில் ஒன்று சாலையோரம் அமைந்திருந்தது. இந்தக் கோயில் தனது வீட்டின் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக சாந்தி முனிரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு கோயிலை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

உத்தரவின்படி சில நாட்களுக்கு முன்னர் கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது கோயிலை இடிக்க அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் நேரத்தில் கோயிலை இடிக்க வேண்டாம் என அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் இன்று கோயிலை இடிக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் வந்தனர். அதைப் பார்த்த அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் கோயிலை இடித்ததுடன், ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த சாந்தி என்பவரது வீட்டின் 4 அடி முன்பகுதியையும் இடித்தனர். இதற்கிடையே பெண் பக்தர்கள் சிலர் பரவசத்துடன் சாமி ஆடியதுடன் சிலையை பிடித்துக்கொண்டு பக்தர்கள் கூச்சலிட்டு அழுதனர்.

தொடர்புடைய செய்தி