திருவள்ளூர்: லாரி மோதியதில் தலை நசுங்கி பலி

3297பார்த்தது
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவர் டாஸ்மாக் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன்  தமிழக ஆந்திர எல்லையோரப் பகுதியான பள்ளிப்பட்டு கரிம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அன்சாரி, இருவரும் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருவள்ளூர் அடுத்த ஈக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி வளைவில் திரும்பும் போது இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் முகம்மது அன்சாரி (48) என்பவர்  சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். இதனையடுத்து லாரி டிரைவர் தப்பிச் சென்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி