அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

554பார்த்தது
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கொளுத்தும் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தன் கட்சி தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மீஞ்சூரை அடுத்த மேலூர் பகுதியிலும் மற்றும் பழவேற்காடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பலராமன் தலைமை வகித்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். முதல் நாளான நேற்று தர்பூசணி பழம், வெள்ளரி பிஞ்சு, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் திரளான அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி