ஏழு மாத குழந்தை மாடியில் இருந்து விழும் வீடியோவால் பரபரப்பு

578பார்த்தது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள Vgn Stafford ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் P2 பிளாக்கில் 4வது மாடியில் வசித்து வந்தவர் வெங்கடேசன் - ரம்யா தம்பதியினர்.

இவர்களுக்கு 7 மாதமே ஆன ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. தாய் ரம்யா குழந்தையை பால்கனியில் வைத்திருந்த போது கை தவறி முதல் மாடியில் உள்ள மேற்கூறையில் விழுந்துள்ளது. அப்பொழுது "டமார்" என்ற சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்துள்ளனர்.

குழந்தை ஷீட்டில் விழுந்ததும் அழத் தொடங்கியது. அனைவரும் வந்து முதல் மாடி பால்கனி கண்ணாடியை உடைத்து மேலே சென்று குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்தை படம் பிடித்த ரித்திகா கூறும்போது, எல்லோரும் முயற்சி செய்து குழந்தையை மீட்ட சம்பவம் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது

தொடர்புடைய செய்தி