அரசு பஸ் கண்ணாடியை உடைத்த இருவருக்கு போலீஸ் வலை

82பார்த்தது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி யை சேர்ந்த சுடலை நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டருக்கும் சுடலைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்குநேரியில் இறங்கியவுடன் தனது நண்பர் வேலுடன் சேர்ந்து சுடலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சுடலை பஸ்சின் முன்பக்க கண்ணாடியை அடித்ததில் விரிசல் ஏற்பட்டது. நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி