நெல்லை சந்திப்பு காவல் உதவி ஆணையாளர் அலுவலகம் பின் உள்ள சிறிய காட்டுப் பகுதியில் ஒருவர் வெட்டு காயத்துடன் உயிரிழந்து கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.