சென்னையில் நாளை தொடங்கும் கூடைப்பந்து போட்டி

75பார்த்தது
சென்னையில் நாளை தொடங்கும் கூடைப்பந்து போட்டி
சென்னையில் ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 18ஆவது மாநில அளவு கூடைப்பந்து போட்டி நாளை (ஏப்ரல் 22) முதல் தொடங்குகிறது. சென்னை தியாகராயநகர் வெங்கட் நாராயணா சாலையிலுள்ள மாநகராட்சி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில், ஆண்கள் பிரிவில் 72 அணிகளும், பெண்கள் பிரிவில் 26 அணிகளும் பங்கேற்கின்றன. இதில், முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.40 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 2ஆவது இடத்திற்கு ரூ.30 ஆயிரம், 3ஆவது இடத்திற்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி