புழுதியால் அவதிப்படும் பாத சாரிகள்

51பார்த்தது
நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் தோண்டப்பட்டு மணல் மற்றும் கற்கள் நிரப்பப்பட்டுள்ளது. சாலை போடும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலை போடும் பணியை உடனே முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி