திருநெல்வேலிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் பலர் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், "கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது. மக்களுக்கு அனைத்தும் தெரியும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம் திமுக" என்று கூறினார். ஸ்டாலின் மறைமுகமாக விஜய்யை தாக்கி பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.