ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

61பார்த்தது
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இவ்வாறு பரவலாக மழை பெய்தாலும் மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் இன்னும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. அந்த வகையில் முன்னீர்பள்ளம் ஆரைக்குளத்தில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே உள்ளது.

இதனால் இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குளத்திற்கு நீர் வராததற்கு காரணம் ஆக்கிரமிப்புகள் தான் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த குளத்துக்கு வரும் நீர்வரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி