தமிழ்நாட்டில் உள்ள மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.