வைகை அணையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு

70பார்த்தது
வைகை அணையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு நேற்று ஆண்டிபட்டி தீயணைப்புத் துறை சார்பில் போலி ஒத்திகை பயிற்சி விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பருவ மழை காலத்தில் தன்னை சுற்றி வெள்ளம் சூழ்ந்தால் தன்னை எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி