ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் டிடிவி தினகரனை ஆதரித்து அவரது மனைவி அனுராதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "வாக்கு இயந்திரத்தில் குக்கர் சின்னத்தின் பட்டன் தேயும் அளவிற்கு வாக்களிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.