உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜிம்மில் 32 வயதான தீபக் என்ற இளைஞர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த இளைஞர் மயங்கி தரையில் விழுந்தார். இதனைப் பார்த்த மற்றொரு இளைஞர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.