நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன் - பாவம் ஐயப்ப பக்தர்கள்!

4487பார்த்தது
நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன் - பாவம் ஐயப்ப பக்தர்கள்!
சென்னையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலைக்கு சென்றுவிட்டு வேனில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் அருகே வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது திடீரென வேனின் எஞ்சினில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதனை சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் உடனடியாக அதில் இருந்த ஐயப்ப பக்தர்கள் அனைவரையும் வெளியேறும்படி கூறினார். ஐயப்ப பக்தர்கள் அனைவரும் வெளியேறிய சிறிது நேரத்திலேயே அந்த வேன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வேனில் பயணித்த 9 பேர் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி