மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிய ஒன்றிய அமைச்சர்

50பார்த்தது
மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிய ஒன்றிய அமைச்சர்
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்த அவர், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார் அங்கு 2 முறை ஒன்றிய அமைச்சராக பதவி வகித்தார். இவரது மகன் பிரிஜேந்திர சிங் ஒரு மாதத்திற்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி