வேகத்தடையால் உயிரிழந்த பெண் காவலர்

67பார்த்தது
வேகத்தடையால் உயிரிழந்த பெண் காவலர்
புதுக்கோட்டையை சேர்ந்த பிரியா கடந்த 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார், அதன் பிறகு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த அவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே எவ்வித எச்சரிக்கை குறியீடும் இல்லாத வேகத்தடை வழியாக நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி