நாவல் பழம் பறித்துத் தராத மாணவனை தாக்கிய ஆசிரியை

591பார்த்தது
நாவல் பழம் பறித்துத் தராத மாணவனை தாக்கிய ஆசிரியை
உத்தரப்பிரதேச மாநிலம், பிஹாரிபூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பரேலியிலுள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பள்ளியில் பணியாற்றும் ராணி கங்வார் என்ற ஆசிரியை, சிறுவனை மரத்தில் ஏறி நாவல் பழங்கள் பறித்து தரச்சொல்லியுள்ளார். இதற்கு சிறுவன் மறுக்கவே 2 மணி நேரம் வகுப்பறைக்கு பூட்டி வைத்து அடித்துள்ளார். இதனால் சிறுவனின் முதுகில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை மீது எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி