மாமியார் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மருமகன்

63பார்த்தது
மாமியார் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மருமகன்
சென்னை குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (65). இவரது மனைவி சிவபூஷணம் (60). இவர்களுக்கு 3 ஆண் மகன்களும், சசிகலா என்ற பெண்ணும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா 10 ஆண்டுகளுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமகிருஷ்ணன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு அவரது தம்பியுடன் வீட்டி விட்டு ஓடிவிட்டார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு இருந்த ராமகிருஷ்ணன், சிவபூஷணத்திற்கு வரும் பென்ஷன் பணத்தையும் வாங்கி குடித்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிக்க பணம் கேட்டு தராததால் அவரது தலையில் கல்லைப்போட்டு ராமகிருஷ்ணன் கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி