அதிக கிக்குக்காக கள்ளச்சாராயம்! துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு

53பார்த்தது
அதிக கிக்குக்காக கள்ளச்சாராயம்! துரைமுருகன் பேச்சுக்கு எதிர்ப்பு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று (ஜூன் 29) அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, “ டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவில் கிக் இல்லை, அதனால் தான் சிலர் அதிக கிக் கிடைக்க கள்ளச்சாராயம் அருந்துகின்றனர், உழைப்பவர்களின் அசதியை போக்க மது தேவைப்படுகிறது” என பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மது ஆலைகள் நடத்துகின்றனர். இப்படி மக்களை சீரழிக்கும் மதுவை பெரிதாக அவர் பேசலாமா என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி