குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் நடந்த விபசாரம்

56பார்த்தது
குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் நடந்த விபசாரம்
குற்றாலத்தில் பல்வேறு தனியார் தங்கும் விடுதிகளில் மசாஜ் சென்டர்கள் இயங்குகின்றன. இதனை 'ஸ்பா' என்று அந்த விடுதிகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலும் ஆண்களுக்கு பெண்களே மசாஜ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் 'ஸ்பா' என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சென்று விசாரணை நடத்தியதில் அங்கு விபசாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (24), அகில் (28) மற்றும் ஆனந்த் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். மேலும், அங்கிருந்த 4 இளம்பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி