ஓடும் லாரியில் பற்றி எறிந்த வைக்கோல்.. பகீர் வீடியோ

71பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் இருந்து அருள் என்பவர் விற்பனை செய்வதற்காக வைக்கோலை லாரியில் ஏற்றி வந்தார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டிற்கு செல்லும் போது நெல்லூர் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மின் கம்பி உரசி தீ பற்றியது. பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் இருந்ததால் லாரி ஓட்டுநர் அருள் தீப்பற்றி எரியும் லாரியை லாவகமாக ஓட்டிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிறுத்தினார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

நன்றி: ஸ்பார்க் மீடியா