மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியர்

70970பார்த்தது
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பேராசிரியர்
இமாச்சலப்பிரதேச மாநிலம் காங்க்ராவில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் பேராசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது ஆராய்ச்சி படிப்புக்கான தலைப்பை மாற்றுவதற்காக வேதியியல் பேராசிரியர் ராஜேந்தர் குமாரை (44) அனுகியுள்ளார். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும்
அவ்வாறு செய்தால் ஒத்துழைப்பதாக பேராசிரியர் கூறியுள்ளார். தொடர்ந்து மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். மாணவியின் புகாரின் பேரில் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி