பானை சின்னம் கருப்பு மையால் அழிப்பு

583பார்த்தது
பானை சின்னம் கருப்பு மையால் அழிப்பு
விழுப்புரம்: பிரம்மதேசம் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் வடநெற்குணம் சாலையில் உள்ள பரசுராமன் என்பவரது வீட்டின் சுவற்றில் திமுக கூட்டணி சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் என்பவருக்கு ஆதரவாக பானை சின்னம் வரையப்பட்டிருந்தது. இந்த பானை சின்னத்தை மர்ம நபர்கள் கருப்பு மையால் அழித்தனர். இதனை அடுத்து அங்கு இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் உடனடியாக சுவற்றில் வெள்ளை சுண்ணாம்பு அடித்து மறைத்து பானை சின்னத்தில் மேல் கருப்பு மையால் அழித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசிகவுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் தர மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி