இளம் பெண்ணை கொடூரமாக தாக்கிய அதிகாரி.. (வீடியோ)

65பார்த்தது
டெல்லி பிந்தாபூரில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சிவசங்கர் செக்யூரிட்டி குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் வேலைக்காக இளம் பெண் ஒருவர் விண்ணப்பித்து பணமும் கொடுத்துள்ளார்.
ஆனால் அப்பெண்ணுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த அலுவலகத்திற்கு வந்து தான் செலுத்திய பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்நிறுவனத்தின் பெண் மனிதவள மேலாளர், செக்யூரிட்டி மற்றும் நிறுவன ஊழியர்கள் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இரக்கமின்றி கீழே போட்டு மிதித்து, அடித்து விரட்டியுள்ளனர். இந்த அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி