புதிய கிரிமினல் சட்டம்.. வெடித்தது போராட்டம்

561பார்த்தது
புதிய கிரிமினல் சட்டம்.. வெடித்தது போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஹிட்-அண்ட்-ரன் எனப்படும் புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் லாரி அல்லது டிப்பர் டிரைவர் ஒருவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடினால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.7 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இந்நிலையில் இந்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி வட மாநிலங்களில் லாரி மற்றும் பச டிரைவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பெட்ரோல், டீசல் எடுத்து செல்லும் போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. பல்வேறு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி