ரயிலில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நடந்துள்ளது. கர்ப்பினி தனது கணவருடன் மும்பை-வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாசிக்கில் இருந்து சத்னாவுக்கு பயணம் செய்தார். வெள்ளிக்கிழமை காலை அவருக்கு பிரசவ வலி காரணமாக ரயிலிலேயே குழந்தை பிறந்தது. அதனால் அந்த ரயிலின் பெயரையே பெற்றோர் குழந்தைக்கு வைத்தனர்.