கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

33780பார்த்தது
கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்
கிருஷ்ணகிரி லைன் கொள்ளையை சேர்ந்தவர் லட்சுமி (40). இவர் நேற்று காலை வீட்டின் அருகே தீயில் கருகிய நிலையில் முட்புதரில் கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் உடலை மீட்டனர். இதனையடுத்து அவரிடம் நடந்த விசாரணையில், கிருஷ்ணகிரி பாத்திமா நகரை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் (45) என்பவருக்கும் லட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. மேலும் பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்ததால் அவருடன் பேச்சுவார்த்தையை லட்சுமி நிறுத்தியுள்ளார். இதனால் காலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் வைத்து லட்சுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் மாதவன். இதனையடுத்து மாதவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி