"பிச்சை" என பேசிய நிதியமைச்சர் - அமைச்சர் கொந்தளிப்பு

558பார்த்தது
"பிச்சை" என பேசிய நிதியமைச்சர் - அமைச்சர் கொந்தளிப்பு
அரசு வழங்கும் நிவாரணத் தொகையை "பிச்சை" என குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், பட்டினியை அனுபவித்தவனுக்குதான் பசியின் கொடுமை புரியும்.வெயிலின் கொடுமையைப் பார்த்தவனுக்குதான் கூரையின் அருமை தெரியும். மானம் மறைக்க கந்தல் ஆடை இல்லாதவனை இழிவாக பார்ப்பவர்களுக்கு ஏழையின் வறுமை புரியாது.நிர்மலா சீதாராமனின் ஆணவம் ஏழைகளை முன்னேற்றாது. வயிறார உணவு, ஒழுகாத கூரை வீடு, அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை அடிப்படை உரிமைகள் என்பதை தத்துவமாக கொண்ட சமதர்ம கொள்கையே திமுகவின் கொள்கை என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி