கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!

6001பார்த்தது
கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!
புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லை நகரை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான கிஷோர்(23) என்ற இளைஞர் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இன்று(ஜூன் 13) காலை தனது நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கிஷோர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, கிஷோரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கிஷோர் லேசான இதய பாதிப்பு காரணமாக மாத்திரைகள் எடுத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி